
சோமாலியாவாக மாறப்போகும் சிறீலங்கா – பசில் ராஜபக்ஷ எச்சரிக்கை – நாட்டில் தற்போதைய நிலைமை இப்படியே நீடித்து சென்றால் எதிர் காலத்தில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உர நெருக்கடி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
aத்துடன் பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ கூறினார்.
தற்போது குருநாகல் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மாத்திரமே நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக வெற்றிகரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.